வெள்ளி, டிசம்பர் 09, 2011

புதிய பழக்கம்----------1 துடிப்புடன் செயல் பட முதல் வழி

     வாழ்கையில் முன்னேற வேண்டும் என்கிற எண்ணம் எல்லாருக்கும் இருக்கிறது ஆனால் வாழ்கையில் வெற்றி பெற்றவர்களை, பெரும் பணத்தில் புரள்பவர்களை  பார்க்கும் போது அவர்களை போல்  நம்மால் செயல் பட முடியவில்லையே,சாதிக்க முடியவில்லையே  என்கிற ஏக்கம் வருகிறது .எல்லாரும் மனிதர்கள்  தாம்.ஒரே கல்லூரியில் படித்த இருவரில் ஒருவன் பெரிய பதவியை அடைகிறான் இன்னொருவன் சாதரணமாக  வேலை பார்த்து கொண்டு இருக்கிறான்.இருவரும் கற்ற கல்வி ஒன்று தான்.ஒன்றாக பட்டம் வாங்கியவர்கள் தான். 

         ஆனாலும் ஒருவன் மட்டும் வாழ்கையில் உயர முடிகிறது.எப்படி?எதையும் சாமாளிக்கும் திறமை அவனிடம் இருக்கிறது.கார் பங்களா என்று சொகுசாக வாழ முடிகிறது.ஆடம்பரமாக வாழ்கிறான் இந்த வெற்றியின் ரகசியம் என்ன?இரண்டாமவன் சிந்தித்து பார்கிறான் வாழ்கையில் உயர்ந்தவன் தனது திறமைகளை வெளிபடுத்துபவன். எதிலும் துணிந்து செயல் படுவன் என்று தெரிகிறது.எப்படி பட்ட சிக்கல்களுக்கும் தீர்வு காண்பவன் என்பதை உணர்கிறான்.ஆனால் அவனை போல் தன்னால் முடியவில்லையே ஏன்?இரண்டாமவன் சிந்தித்து பார்க்கும் போது விடை கிடைகிறது

         எந்த விசயத்திலும் இவன் மெத்தனமாக நடந்து கொள்பவன் பழக்க வழக்கங்கள் அப்படி.அவனது பெற்றோர் அவனை கண்டிப்பாக வளர்த்து விட்டார்கள்.புதிதாக எதையாவது செய்வது என்றால் பயம்.கல்லூரிக்கு போகும் போது கூட ஒரே பாதையில் சென்று வருபவன்.வேறு பாதையில் போக பயம்.மாறன்களை விரும்பாதவன்.எல்லா விசயத்திலும் பெற்றோர்களை போலவே வளர்ந்து கொள்ள வேண்டும் என்று வளர்க்க பட்டவன்.உள்ளுரிலே வேலைக்கு சேர வேண்டும் என நினைத்தான். வெளியூர் சென்றால் நிறைய பணம் கிடைக்கும், விரைவில் பதவி உயர்வு கிடைக்கும் என்றாலும் ஏற்று கொள்ள விரும்பவில்லை.


          பழக்கத்தின் பயன்.தலைவிதி என்று நினைத்து கொள்வான். அதனால் அவனால் வாழ்கையில் வேகமாக முன்னேற முடியவில்லை.பொதுவானக துடிப்புடன் செயல் படுவர்கள் திறமையுடன் செயல் படுவர்கள் தான் பெரிய அளவில் சாதனைகளை செய்ய முடியும்.இதற்காக  அவர்கள் முதலில் தமை சில கட்டுப்பாடுகளில் இருந்து விடுவித்து கொள்ள வேண்டும். மனதில் சுதந்திரம் பெற வேண்டும்.பழக்க வழக்திர்க்கோ,கட்டுபாடிற்கோ அடங்கி பெட்டி பாம்பாக இருக்க கூடாது 


          முதலில் தனக்கு சுந்ததிர உணர்வு ஏற்படும் படி மனபக்குவம் அடைய வேண்டும்.எப்படி சுந்ததிர உணர்வு கிடைக்கும்?அதை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம் 

புதிய பழக்கம்----------1 சுந்ததிர எப்படி உணர்வு கிடைக்கும்?



HOW I GOT IT
  நான் வயது வந்த இளைஞன் என்னால் சுதந்திரமாக வாழ முடியும்.நினைத்ததை செய்ய முடியும் யாரும் நம்மை கட்டுபடுத்த முடியாது என்ற உணர்வு ஏற்பட வேண்டும்.ஒருவன் மாணவனாக இருந்த போது அரசியலில் பங்கேற்று அரசை எதிர்த்து போரிட வேண்டி  இருந்தது.அவனை கைது செய்து  சிறையில் அடைத்தார்கள்.பல மாதங்கள் சிறையில் அடைபட்டு இருக்க நேர்ந்தது.அவன் சிறையில் அடைபட்டதால் தன் சுந்திரம் பறி போய்விட்டதாக நினைத்து கொள்ளவில்லை.என்னை நான்கு சுவர்களுக்குள் அடைத்து விட்டார்கள் அதினால் என்ன?என் மனதை யாரும் கட்டு படுத்த முடியாது.நான் சிந்திக்க முடியும்.என்னால் எதிர்காலத்திற்கான திட்டத்தை வகுக்க முடியும்.என்று எண்ணினான் ,எதிர்கால திட்டங்களை எழுத தொடங்கினான்.சிறையில் இருந்து விடுவிக்க பட்டதும் அவன் எழுதிய புத்தகங்கள் அச்சாகி வேகமாக விற்க துவங்கியது.பெரிய அளவில் பெயரும், புகழும்,பணமும் கிடைத்தது.அந்த புத்தகத்தை படிபவர்கள் எப்படி ஒரு மனிதன் சுந்திரமாக வாழ முடியும் என்பதை உணர்ந்தார்கள்.சுதந்திர உணர்வு பெற்றவர்கள் தான் வாழ்கையில் நினைத்ததை சாதிக்க முடியும்.எதையும் அதிவேகமாக செய்து முடிக்க முடியும்.

         ஒருவன் பழக்க வழக்கங்களுக்கு  ஆளாகி விட்டால் அவன் உடலை சுற்றி அந்த பழக்கவழக்கங்கள் கயிற்றை போல சுற்றி கொண்டு விடும்.அவன் கை கால் கட்டபட்டவனை போல் குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே செயல் பட முடியும்.அவன் தன் பழக்க வழக்கங்களை மாற்றி கொள்ள வேண்டும்.தன்னை சுற்றி உள்ள கயிறை  அறுத்து கொண்டு வெளியே வர வேண்டும் இது முடியுமா?முடியும்.துடிப்புடன் செயல் பட பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட முழு மூச்சுடன் செயல் பட வேண்டும்.உதாரணமாக பூமியின்  ஈர்ப்பு சக்தியை பற்றி நமக்கு நன்றாக தெரியும்.ஒரு கல்லை தூக்கி போட்டால் மீண்டும் பூமிக்கே வந்து விடும்.இந்த ஈர்ப்பு சக்தியை மனிதன் சமீபகாலமாக வென்று  காட்டி இருக்கிறான் 

          விமானம் வானத்தில் பறக்கும் போது சக்தி வாய்ந்த இஞ்சின் அதனை பூமியில்  விழாமல் தாங்கி பிடித்து கொண்டு உயரே உயரே போக செய்கிறது நினைத்த இடத்தில விமானம் போய் இறங்க முடியும்.விமானம் என்பது பொதுவாக முப்பதாயிரம் அல்லது   நாற்பதாயிரம் அடி வரையில் மட்டுமே பறக்கும்.அந்த உயரத்தையும் கடந்து சந்திர மண்டலத்துக்கு போய் வந்தது எப்படி?வானவெளி கப்பலில் சந்திர மண்டலத்துக்கு  போய் வர முடிந்தது.ஆனால் அவன் பயணம் செய்த வான வெளி கப்பலை,பூமியின்  ஈர்ப்பு சக்தியை மிஞ்ச கூடிய வகையில் ஆற்றல் மிகுந்த ராக்கெட் அதிவேகமாக லட்சகணக்கான மைல்  வேகத்தில் இழுத்து சென்றது.  

          அதன் விளைவாக தான் இன்று வான வெளியில் ஆராய்ச்சி செய்ய போகிறவர்கள் ராக்கெட்டின் உதவியுடன் வானவெளி  கப்பலில் உயரமான இடத்தை அடைய முடிகிறது.பூமியின் அபார  ஈர்ப்பு சக்தியை வெல்ல முடிந்த மனிதன் பழக்கவழக்கங்களை    வெல்ல முடியாதா?முடியும்.முயன்றால் முடியாதது எது?

புதிய பழக்கம்----------1 மற்றவர்கள் பார்வையில் நாம் செயல்படும் போது



சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம்.நம் பெற்றோர்,உறவினர்,நண்பர்கள் மட்டுமின்றி  நம்மை சுற்றி உள்ளவர்கள் நம்மை கவனித்து கொண்டு வருகிறார்கள் என்ற உணர்வு அனைவர்க்கும் சர்வ சாதரணமாக ஏற்படுகிறது.அந்த நிலையில் மற்றவர்கள்  நம்மை பற்றி என்ன நினைகிறார்கள் என்ற எண்ணம் மனதில் தோன்றலாம் 

               "நீ எப்போதும் நேரத்திற்கு வருவதில்லை"
               "நீ ஒரு ஓவியன்"
               "நீ மிகவும் அதிகமாக சாபிடுகிறாய்"
                "நீ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாய் என்பதை நம்ப முடியவில்லை"

          இப்படி நம்மை பற்றி மற்றவர்கள் சாடுவதை நாம் கேட்டு இருப்போம்.இப்படி பட்ட கருத்துகள் ஒருவருடைய குணத்தின் குறை பாடுகளை உணர்த்துவது ஆகும் இந்த மாறி குறை பாடுகள் ஏற்படாத படி நடந்து கொள்ள நம்மால் முடியும்.அது தான் எதையும் சீரிய முறையில் சிந்தித்து முடிவெடுப்பது.மனதில் ஒரு சுறுசுறுப்பு ஓடி கொண்டு இருக்கும் போது அதனால் பல நல்ல விளைவுகள் ஏற்பட கூடும்.நமது செயலில் அபார திறமை வெளி படும்.
பழைய பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக புது முயற்சியில் இறங்க முடியும்.

          அப்படி முயலும் போது எந்த ஒரு பிரச்சனையும் ஆக்க பூர்வமாக சிந்திக்க முடியும்.நாம் மும்பை நகரத்துக்கு போகிறோம்.அங்கே போக வேண்டிய இடங்களை கண்டறிய ஒரு வரைபடத்தை எடுத்து போகிறோம்.ஆனால் அது மும்பை வரைபடம் அல்ல பெங்களூர் வரைபடம்.அதை வைத்து கொண்டு மும்பையில் நாம் போக வேண்டிய இடத்துக்கு போக முடியுமா?முடியாது. ஆகையால் மும்பை வரைபடத்தை வாங்கி அதன் படி செயல் பட வேண்டும்.வாழ்க்கை அப்படி தான்.

          சுற்றுபுறத்திற்கு  ஏற்ப சிந்திக்க வேண்டும்.எந்த விசயத்தையும் இரண்டு கண்ணோட்டங்களோடு பார்க்க வேண்டும். முதலாவது ஒரு விசயத்தை நம்மால் செய்ய முடியாது என்று நினைப்பது.பயம்,தயக்கம்,அனுபவம் இல்லாதது தான் காரணமாக இருக்கலாம்.இரண்டாவது அதே விசயத்தை துணித்து செயலாற்ற முடியும் என்று நினைப்பது.இந்த இரண்டு வகை எண்ணங்களையும் கொஞ்சம் பார்க்கலாம்.ஒரு வேலையை செய்ய தயங்குபவர்கள் பொறுப்பை ஏற்க மாட்டார்கள் எதிலும் உறுதியுடன் செயல் பட மாட்டார்கள்.

          என் அறிவு திறமை அவ்வளவு தான்.என்னால் அவ்வளவு தான் செய்ய முடியும் என்ற எண்ணம் இவர்கள் மனதில் மேலோங்கி நிற்கும்.என்னால் மேலும் எதுவும் செய்ய முடியாது என்று முடிவு கட்டுவார்கள்.எனக்கு நேரம் போதவில்லை.இதற்க்கு மேல் செய்ய முடியவில்லை.ஏதோ ஒரு சக்தி எனக்கு அப்பாற்பட்ட சக்தி என்னை தடுத்து விட்டது என்று கூறுவது மற்றொரு வாதம். என் மனைவி கொஞ்சம் பொறுமையை கடை பிடித்து இருக்க வேண்டும்.அப்போது நான் எடுத்த காரியத்தை முடித்து இருப்பேன் என்று மற்றவர் மேல் பழி போடுவது ஒரு எண்ணம்.

          நான் இப்படி செய்ய வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் மற்றவர்கள் வேறு விதமாய்  செய்ய தூண்டி என்னை தடுமாற செய்து  விட்டார்கள் என்ற விதாண்ட வாதம்.நம்மால் முடியுமா?என்ற கேள்வியுடன் செயலில் இறங்கும் போது பாதி தோல்வி நம்மை பாதிக்கும்.நம்மால் முடியும் என்று செயல் படும் போது பாதி வெற்றி கிடைத்தது போல் தோன்றும்.முதலில் விவாதித்தது நெகடிவ் அணுகுமுறை.இரண்டாவது அணுகுமுறை பாசிடிவ்  தன்மை உடையது.ஒரு விசயத்தை இந்த இரண்டு அணுகுமுறையில் சோதித்து பார்க்கும் போது எப்படி இருக்கும்?

   எதிர்ப்பு மனப்பான்மை.                        
  (நெகடிவ் அணுகுமுறை)   
1.இதற்க்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது
 2.நான் எப்போதும் அப்படி தான்.                                            
3. அவன் என்னை பைத்தியகாரனாக்கி விட்டான்.              
4. அதை செய்ய என்னை அனுமதிக்க மாட்டார்கள்.          
5.நான் அதை செய்தே ஆக வேண்டும்.                              
6. வேறு வழியில்லை.                                                                  
7. நான் செய்தாக வேண்டும்

       முடியும் என்ற மனப்பான்மை

               (பாசிட்வ் அணுகுமுறை )
1.பிரச்சனையை சமாளிக்க வேறு வழிகளை சிந்திக்கலாம்
2.நான் வேறு வழியை கடை பிடிக்க முடியும் 
3. நான்  என் உணர்சிகளை கட்டு படுத்த முடியும் 
4. என்னால் அதை சரி செய்ய முடியும்  
5. நான் வேறு வழியை கடை பிடிக்க முடியும்.
6.  மாற்று வழியுண்டு.
7.நான் செய்ய விரும்புகிறேன் 
  
          ஒவ்வொரு  விசயத்திலும் இந்த இரண்டு வகை அணுகு முறைகளை ஒவ்வொருவரும் கடை பிடிக்க முடியும்.மனம் தான் இதற்க்கு காரணம்.பழக்கம் என்ற பெயரினால் செய்ய முடியாது என்பதை விட புது பழக்கத்தை ,பாசிடிவ் அணுகுமுறையால் நம்மை நாமே துடிபுள்ளவர்களாக,திறமை உள்ளவர்களாக மாற்றி கொள்ள முடியும்.  

புதிய பழக்கம்----------1 உண்மையான காரணம் என்ன?



          எந்த விசயத்துக்கும் உண்மையான காரணம் என்று ஒன்று உண்டு.போலியான காரணம் என்று ஒன்று உண்டு.இதில் எதை கண்டுபிடிக்க  வேண்டும் என்பது தான் பிரச்னை.கல்லூரியில் படித்து கொண்டு இருக்கும் ஒரு மாணவன் தீடீர் என்று  ஆசிரியரிடம்  விடை கொடுங்கள் நான் கிரிக்கெட் விளையாட போக வேண்டும்  என்றான்.ஆசிரியர் அவனிடம்  நீ போயாக வேண்டுமா நீயாக போக விரும்புகிறாயா என்று கேட்டார்.

         நான் போயாக வேண்டும்
         போகாவிட்டால் என்ன ஆகும்?
         என்னை கிரிக்கெட் அணியில்  இருந்து நீக்கி விடுவார்கள் 
         அப்படி நீக்கி விட்டாள் உன் நிலை என்னவாகும்?
         என்னால் பொறுத்து கொள்ள முடியாது.

         அதவாது கிரிக்கெட் அணியில் இடம் பெற வேண்டும் என்பதற்காக போகிறாய் இங்கே வகுப்பை தவற விட்டால் என்ன ஆகும் என்று கேள்வி எழுப்பினார்.அந்த மாணவன் எனக்கு தெரியாது என்றான்.ஆசிரியர் அவனிடம் நன்றாக  யோசித்து பார் வகுப்பை தவறவிட்டால் உன் நிலை என்னவாகும் என்று கேட்டார் அந்த மாணவன் என்னை வெளியேற்றி விடுவீர்களா என கேட்டான் அது செயற்கை ஆன செயல் உண்மையில் என்னவாகும் என்று ஆசிரியர் கேட்டார். மற்ற மாணவர்களுடன் ஒப்பிடும் போது உன் நிலை என்னவாகும் கிரிக்கெட் பயில போகாவிட்டால் அணியில் இடம் பெற முடியாது.வகுப்பை தவற விட்டாள் உன் நிலை என்னவாகும் என்றார்.என் கல்வி தடை படும் என்றான்.இப்போது முடிவு செய்து கொள் கிரிக்கெட் பயில போக வேண்டுமா?  இல்லை படிக்கச் வேண்டுமா என்று என்றார்.அவன் நான் படிக்கிறேன் ஓய்வு நேரத்தில் மட்டும் விளையாட செல்கிறேன் என்றான்.

         ஒரு முடிவை எடுப்பது அவன் சுதந்திரம் ஆனால் அது எதிர்காலத்தை எந்த அளவு பாதிக்கும் என்பதை சிந்தித்து செயல் பட வேண்டும்.

புதிய பழக்கம்----------1 இயலாமைக்கு காரணம் காட்டுபவர்கள்



         எந்த ஒரு செயலுக்கு தயக்கம் காட்டுபவர்கள் பயபடுபவர்கள் மற்றவர்கள் மேல் பழியை போட்டு ஒதுங்கி கொள்வார்கள்.இவர்கள் செய்யும் காரியங்களுக்கு உறவினர்கள் நண்பர்கள் தடங்கலாக இருப்பாதாய் சொல்வார்கள் அதற்கான ஆதாரத்தையும் காட்ட தயாராய்  இருப்பார்கள்  மற்றவர்களால் அவர்கள் திட்டங்கள் பாழாகி விடுவதாயும்  வாழ்க்கை என்பது தன்னால் ஓடி கொண்டு இருப்பதாயும் அடிகடி சொல்வார்கள்.மற்றவர்களை.சுற்று புறத்தை,நட்சத்திர பலன்களை கூட காரணம் கட்ட தயங்க  மாட்டார்கள்  

          செய்ய இயவில்லை என்று ஆயிரம் காரணம் காட்டும் இவர்கள் செய்ய முடியும் என்பதற்கு ஒன்று இரண்டு காரணங்களை  கூட காட்ட மாட்டார்கள்.எப்படி பட்ட தடங்களையும் மனிதன் சமாளிக்க முடியும் என்பதை வலியுறுத்தி மேடையில் ஒரு குரு பேசி கொண்டு இருந்தார்.ஒருவன் அவரிடம் வந்து நீங்கள் பேசுவது கேட்க  நன்றாக இருக்கிறது .வாழ்கையில் சாத்தியம் படாது நிஜத்தில் நடக்காது என்றான்.ஏன் அப்படி சொல்கிறாய் என்றார் குரு. ஒவ்வொரு  சந்தர்பமும் சுற்று புறமும் வித்தியாசமானது.என் வாழ்கையை கேளுங்கள் என்று கூறினான்,

         நானும் என் மனைவியும் எப்போதும் போல் அன்புடன் இருக்க முடியவில்லை.அவள் என்னிடம் அன்பு செலுத்துவதில்லை அதினால் நானும் அன்பு செலுத்துவதில்லை.இதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும் என்றான் அதருக்கு குரு உங்களுக்குள் அன்பு செலுத்த வேண்டும் என்ற வளர்ச்சியே இல்லையா என்றார்.அவன் ஆரம்பத்தில் அதிக அன்புடன் பழகினோம் இப்போது இல்லை என்றான்.அப்படியானால் உன் மனைவியிடம் அதிக அன்பு காட்டு முன்னை விட அதிகமாக நேசி என்றார்.எங்களுக்கு தான் உணர்ச்சியே இல்லையே அப்புறம் எப்படி முடியும் என்றான்,

OHHHHHHHHHHOOOOOOOOO
        அதினால் தான் சொல்கிறேன் உணர்சிகளை கொட்டி அன்பு செலுத்த முயல வேண்டும்.மனைவியாக ஒரு சில தியாகம் செய் விட்டு கொடு அவளுக்கும் உன்னை நேசிக்க வேண்டும் என்ற எண்ணம் தானாக  வரும் என்றார்.காதல் என்பது வெறும் சொல் அல்ல செயலில் காட்ட கூடியது.ஏதாவது ஒரு காரணத்தை காட்டி மனைவியை வெறுத்து விட கூடாது அதே போல் தான் மனைவியும் கணவனை ஒரு காரணத்துக்காக ஒதுக்கி விட கூடாது 

        சினிமா படங்கள் பார்க்கும் போது மனிதன் உணர்சிகளுக்கு அடிமை ஆகிறான் என்பது போல் கதைகள் நம் மனதை தொடுகின்றன..உணர்சிகளுக்கு மனிதன் அடிமை ஆவது போன்று தான் பெருமான்மையான கதைகள் வெளி வருகிறது.நாம் செய்யும் தவறுகளுக்கு உணர்ச்சியை காரணம் காட்டுபவர்கள் பலர்.மற்றவர்களால் உணர்சிகளால் தோல்வி உண்டானது என்று தம்மையே சமாதனபடுத்தி கொள்வார்கள்.சாதித்து  காட்ட வேண்டும் என்ற என்ன உடையவர்கள் இப்படி பேசுவதில்லை.அன்பு காதல் எல்லாம் வெறும் வார்த்தைகள் அல்ல செயலில் காட்ட பட வேண்டிய ஒன்று.

        செயலில் காட்டும் போது ஒரு சில தியாகங்கள்  செய்ய வேண்டி வரும் விட்டு கொடுக்க வேண்டு வரும். மற்றவர்களுக்காக தியாகம் செய்பவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் எப்படி விட்டு கொடுத்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அன்பு செலுத்துபவர்கள்  அன்பு செலுத்தாதவர்கள்  நடக்கை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் .பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் என்ன தியாகம்  செய்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அன்பு செலுத்துவது என்பது மகத்தான விசயம் 

        அன்பு செலுத்துவதால் காதலிப்பதால்  உணர்சிகளை நமது கட்டுபாட்டிற்குள் கொண்டு வர முடியும்.உணர்சிகளை கட்டுபாட்டிற்குள் கொண்டு வருபவர்கள் அனைவரும் வாழ தெரிந்தவர்கள் வாழ்கையில் சாதனைகளை  புரிபவர்கள் வெற்றியில் திளைத்திருப்பவர்கள்.

                என்ன நண்பர்களே நீங்கள் சாதிக்க தயாரா அப்படி என்றால் இந்த முதல் பழக்கத்தை எல்லாம் கடை பிடியுங்கள்  அடுத்த படியாக நமக்கு தொடர்புள்ள விசயங்களை பற்றி புதிய பழக்கம் இரண்டாம் பகுதியில் பார்க்கலாம்